Saturday 12 October 2013

ஒன்றாக வேண்டும் நாம் வென்றாக வேண்டும் தமிழ்

இங்கு இணையத்தில் ஆதரவு தெரிவிக்கும் சென்னையில் உள்ள உணர்வாளர்களே பலர் இங்கு நடக்கும் போராட்டங்களில் கலந்து கொள்வது இல்லை..

தயவுசெய்து உணர்வாளர்கள் போராட்டங்களை பல்வேறு வடிவங்களில் முன்னெடுங்கள்...உங்கள் பகுதிகளில் நடக்கும் போரட்டங்களில் கலந்து கொள்ளுங்கள்..

இனி போராட்டங்களில் கலந்து கொள்வதற்கான காரணங்களை கண்டெடுங்கள்..

உணர்வு உள்ள நாமே பங்கெடுக்க வில்லை என்றால் பிறகு மக்களிடம் எப்படி உணர்வை மேலோங்க செய்ய போகிறோம்...

சாதி,மத,கட்சி பேதமின்றி யார் இனத்திற்கு ஆதரவாக போராடினாலும்...அவர்களின் கடந்த கால செயல்களினால் விமர்சனங்களை வைக்காமல்...அங்கு சென்று ஆதரவு தெரிவியுங்கள்....

துரோகியாக இருந்தாலும் எதிரியாக இருந்தாலும் இனத்திற்கு ஆதரவான போரட்டங்களை செய்தால்....அவர்கள் இனத்திற்கு ஆதரவாக தொடர்ந்து நடிப்பதற்கு ஆவது ஆதரவு கொடுங்கள்...அவர்கள் இனத்திற்கு ஆதரவாக தொடர்ந்து நடிக்க வேண்டிய நிர்பந்தத்தை உருவாக்குங்கள்.....ஆனால் தேர்தலில் அவர்களுக்கு உங்கள் வாக்குகளை போடாதீர்கள்...இனத்திற்கு ஆதரவானவர்களுக்கு மட்டும் உங்கள் வாக்குகளை போடுங்கள்....

நீங்கள் எந்த கட்சி,அமைப்பில் இருந்தாலும் இனத்திற்கு வேறு கட்சி ,அமைப்பில் உள்ளவர்கள் ஆதரவாக போராட்டம் நடத்தினால்....உங்கள் கட்சி அமைப்புகளை மறந்து தமிழனாக அவர்களுக்கு ஆதரவு கொடுங்கள்..ஊக்கபடுத்துங்கள்......

இனத்தின் தோல்வி என் தோல்வி
இனத்தின் வெற்றி என் வெற்றி
என்பதை உணருங்கள்..

ஒன்றுபடுவோம் வென்றெடுப்போம்...
தமிழன் என்று சொல்லடா
தரணியில் தலைநிமிர்ந்து நில்லடா
என்ற வாசகத்தை மெய்பிப்போம் வாருங்கள்
என் இன தோழமைகளே

மேலும் அறிந்து கொள்ள :https://www.facebook.com/GTOChennai