Saturday 24 January 2015

துரோகி கருணா இறந்துவிட்டதாக செய்தி வருகிறது ,a news that comes ex ltte east region leader Renegade karune died

துரோகி கருணா இறந்து விட்டதாக நம்பத்தகுந்த செய்திகள் வருகின்றன. a news arrive that ex ltte east region leader karuna died

Monday 13 October 2014

புதிதாக ஆரம்பமாகும் ஒரு நிறுவனத்தின் பங்குகளை(share) இலவசமாக பெற முந்துங்கள்.இன்னும் ஒரு வாரமே உள்ளன

எந்தவித முதலீடும் இன்றி இணையத்தில் பணம் சம்பாதிக்க எளிய வழி..
==========================================================
குறைந்த நேரம் மட்டும் செலவழித்தால் போதும்…….
முகநூலுக்கு போட்டியாக Globallshare எனப்படும் சமுக வலைதளம் இணைய உலகில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது…..
இப்போது நாமும் Globallshare பங்குகளை இலவசமாக பெற்று நாமும் அன்நிறுவனத்தின் பங்குதாரராக முடியும்…..
அதற்கான சுலபமான வழிகள்:
முதலில் கீழே காணப்படும் லிங்க் – ஐ கிளிக் செய்து….. Globallshare – ல் ஒரு புதிய கணக்கை தொடங்கவும்
https://www.globallshare.com/en/3180507.html
பின்பு, உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு வரும் மின்னஞ்சலை கிளிக் செய்து உங்கள் அக்கவுன்ட்டை உறுதி செய்துக்கொள்ளவும்…..
பின்பு லாக்-இன் செய்து GAS -WORLD மெணுவுக்கு சென்று அதை activate செய்துக்கொள்ளவும்.
பின்பு GAS -WORLD ல் உள்ள web office க்கு சென்று invite button மூலம்
நண்பர்களை இந்த தளத்திற்கு சேர்க்கவும்
நண்பர்கள் சேர சேர உங்களுக்கு நிறுவனத்தின் பங்கு வந்து சேரும்
இது ஒரு முதலீடு இல்லாமல் சுலபமாக சம்பாதிக்கும் வழி.
Continuous income
After your interests in the global community of the GlobAllShare you may have a continuous monthly income, since you are paid a dividend from the global profit in each month, in proportion of the number of shares you own.
If you have invited 5 of your friends to the GlobAllShare community successfully and your invited friends also invite 5 of their friends in 7 subsequent levels following you, then you may be entitled to the following dividend in each month.
level 1 5 Invitees 1 GAS share
level 2 25 Invitees 5 GAS share
level 3 125 Invitees 25 GAS share
level 4 625 Invitees 125 GAS share
level 5 3 125 Invitees 625 GAS share
level 6 15 625 Invitees 3 125 GAS share
level 7 78 125 Invitees 15 625 GAS share
Total 19.531 GAS share
According to the example, you may get altogether 19,531 GlobAllShare gratuitous shares, after which you will be paid a monthly dividend after the global launching of the venture. If, for instance, you are paid only $ 0.25 dividend from the global profit a month, you will get $5,000 a month. You may even get a dividend of monthly $0.5 or $1.0 after each of your shares, thus a monthly earning of $10,000 or $20,000 may easily be generated.
You can monitor the number and value of your shares as well as the sum of your monthly dividend at the WebOffice permanently.
Globallshare | Make the Most of World
Meet new people, meet new friends. Talk to Anyone in the World.
GLOBALLSHARE.COM

இத்தகவலை அனைவருக்கும் பகிருங்கள்..இணையத்தில் ஆளுமை  உ ள்ளவர்கள் ..வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்

Tuesday 21 January 2014

'பாம்பு பாதி-பெண்ணில் பாதி' கலந்து பிறந்த தாய்லாந்து சிறுமியை பார்க்க அலைமோதும் மக்கள் கூட்டம் ??இது உண்மையா பொய்யா..is it true or false?

பாங்காக், ஜன. 20-

தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் மார்பு பகுதிக்கு மேலே பெண்ணாகவும், கீழ் பகுதி பாம்பாகவும் தோற்றமளிக்கும் விசித்திர சிறுமியை காண நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையில் காத்திருக்கும் செய்தி ஆசிய ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தற்போது 8 வயது சிறுமியாக இருக்கும் மய் லி ஃபே என்ற அந்த சிறுமி பிறந்த போதே அவளது உடலின் கீழ் பகுதி பாம்பின் தோற்றத்துடனும், தலை முதல் மார்பு வரையிலான பகுதி மனித தோற்றத்துடனும் இருந்ததாக அவளது பெற்றோர் கூறுகின்றனர்.

இதைப் போன்ற வினோதப் பிறவிகள் உலகில் தோன்றுவது மிக, மிக அரிது என குறிப்பிடும் உடல் கூறியல் வல்லுனர்கள், இந்த முரண்பாடான உடல் அமைப்பை மருத்துவ குறியீட்டின்படி, 'செர்பெண்டொசிஸ் மெலியனார்கிஸ்’ அல்லது 'ஜிங் ஜிங் நோய்’ என்று குறிப்பிடுகின்றனர்.

இயற்கை படைப்பின் இந்த முரண்பாட்டினை நிவர்த்திக்க இதுவரையில் எவ்வித சிகிச்சை முறையும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் தாய்லாந்து நாட்டின் மருத்துவ வல்லுனரான டாக்டர் பிங் லாவ் என்பவர் கூறியுள்ளார்.

பாம்புப் பெண்ணான மய் லி ஃபே-வை தரிசிக்கவும், அவளது உடலை தொட்டு கண்களில் ஒற்றிக்கொள்ளவும் இந்து, புத்த மதத்தினர், உள்ளூர் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் அதிகாலை முதல் நள்ளிரவு வரை நீண்ட வரிசையில் கால்கடுக்க காத்துக் கிடக்கின்றனர்.

அவர்கள் வழங்கும் காணிக்கை பணத்தின் மூலம் அந்த பெண்ணின் குடும்ப வருமானமும், வாழ்க்கை தரமும் குறுகிய காலத்துக்குள்ளாகவே அபரிமிதமான வளர்ச்சியை அடைந்துள்ளது. இருப்பினும், அவர்களின் நிம்மதியும், தனிமையும் தொலைந்துப் போனதாக மய் லி ஃபே-வின் நெருங்கிய உறவினர் ஒருவர் தாய்லாந்து தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். 
 

நன்றி:மாலைமலர்
http://www.maalaimalar.com/2014/01/20152522/half-Snake-bodied-girl-in-Thai.html

Saturday 4 January 2014

வாழ்க்கையல் எவ்வளவு முயற்சித்தும் தோல்வி அடைந்தவர்கள் வெற்றி பெற இந்த வழிமுறையை பின்பற்றி பாருங்கள்-the way of success who got continues failure

விருப்பம் உள்ளவர்கள் முயற்சித்து பாருங்கள்
ஆகாயம் – வெற்றியின் வாயில்படி

எத்தனை எத்தனை முயற்சி செய்தாலும் எனக்கு மட்டும் வெற்றி கிட்டுவதில்லையே? நான் செய்வதைத் தானே அவனும் செய்கிறான் ஆனால் அவன் மட்டும் வெற்றி பெறுகிறானே என்று ஆதங்கப்படுவரா நீங்கள்? சரி, ஒரே செயலை ஒருவர் செய்யும் போது கிட்டும் வெற்றி, மற்றொருவருக்கு சாத்தியப்படுவதில்லையே எதனால்? இது ஆகாய சக்தியை நாம் கிரகித்துக் கொள்ளும் விதத்தினால்தான் என்கிறார் சத்குரு. அதை வளர்த்துக் கொள்வதற்கு வழியும் சொல்கிறார். ஆகாயம் உங்கள் வசமாகட்டும்!

சத்குரு:

காரணமே இல்லாமல் சில பேர் வாழ்க்கை முழுவதும் அலைகழிக்கப்படுகிறார்கள், இல்லையா? காரணமே இல்லாமல் மற்ற சிலர் அனைத்திலும் ஆசிர்வதிக்கப்பட்டவர்களாகத் தோன்றுகிறார்கள். இதற்கெல்லாம் எந்தவிதமான காரணமும் இல்லை. நம்மை விட பெரியதான அந்த அறிவாற்றலின் ஒத்துழைப்பை, விழிப்புணர்வுடனோ அல்லது விழிப்புணர்வின்றியோ பெற முடிகின்ற உங்களுடைய திறமைதான் காரணம். ஆகாயமே அடிப்படையான சக்தி.

ஒரு மனிதனை மிகப் பெரிய சாத்தியமாக மாற்றுவதற்கு, நீர், நிலம், நெருப்பு, காற்று, இவற்றோடு ஐந்தாவது மற்றும் மற்ற நான்கை விட மிகப் பெரிய பரிமாணமான ஆகாயம் ஆகியவை எப்படி செயல்படுகின்றன என்பது மிக முக்கியம். இன்றைய நவீன விஞ்ஞானம், ஆகாஷிக் புத்திசாலித்தனம் என்றழைக்கப்படும் ஒரு விஷயத்தை ஏற்றுக் கொண்டுள்ளது; அதாவது வெற்றிடத்துக்கென்று ஒரு அறிவாற்றல் இருக்கிறது. இந்த அறிவாற்றல் உங்களுக்குச் சாதகமாக வேலை செய்கிறதா அல்லது பாதகமாக வேலை செய்கிறதா என்பதுதான் உங்கள் வாழ்க்கையின் தன்மையை முடிவு செய்யும். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவரா அல்லது வாழ்க்கை முழுவதும் அலைகழிக்கப்படப் போகிறீர்களா என்பது அந்த அறிவாற்றலைப் பொறுத்தே இருக்கிறது.

ஆகாயம் – அதை ஐந்தாவது பூதம் என்று சொல்வது சரியல்ல, ஏனென்றால் பிற பூதங்களைவிட உயர்ந்தது. மற்ற நான்குமே அதைச் சார்ந்தே செயல்படுகின்றன. இப்போது நாம் ஒரு வட்டவடிவ கிரகத்தில் இருக்கிறோம். பூமி, சூரிய மண்டலம், இந்தப் பால்வெளி மண்டலம், ஒட்டுமொத்த பிரபஞ்சம் என்று அனைத்துமே ஆகாயம் என்னும் வெளியில்தான் இருக்கின்றன. நீங்களுமே ஆகாயத்தின் பிடியில்தான் இருக்கிறீர்கள்.

டெண்டுல்கர் கூட சதமடித்த பிறகு ஆகாயத்தை அண்ணாந்து பார்ப்பதை கவனித்திருக்கிறீர்களா? அவர் மட்டுமல்ல, ஆதிகாலத்திலிருந்து மனிதன் ஏதாவது ஒரு சாதனையை செய்து முடித்தவுடன், ஆகாயத்தை அண்ணாந்து பார்ப்பதை வழக்கமாக வைத்திருக்கிறான். அவர்களில் சிலர், மேலே இருப்பவனையோ அல்லது வேறு சில கடவுள்களையோ ஆகாயத்தை அண்ணாந்து பார்த்து கண்டுபிடிக்க முயற்சி செய்யக்கூடும், ஆனால் மற்ற பெரும்பாலானவர்களுக்கு அவர்களுக்குத் தெரியாமலேயே அங்கு ஏதோ ஒன்று இருக்கிறது என்கிற உண்மை தெரிந்துள்ளது.

ஏதாவது ஒரு சமயத்தில், நீங்கள் ஒரு உச்சபட்ச அனுபவத்தை எட்டுகிறபோது, உங்கள் விழிப்புணர்வில் இல்லாமலேயே உங்கள் உடல், நன்றியுணர்வில் மேல் நோக்கிப் பார்க்கிறது. ஏனென்றால் மனிதனுக்குள் இருக்கும் ஏதோ ஒரு அறிவாற்றலுக்கு அதைப் பற்றிய ஒரு புரிதல் இருக்கிறது.

உங்கள் வாழ்க்கையில் அந்த ஆகாயத்தின் ஒத்துழைப்பை எப்படிப் பெறுவது என்று உங்களுக்குத் தெரிந்தால், பிறகு உங்கள் வாழ்க்கை ஆசிர்வதிக்கப்பட்ட ஒன்றாக இருக்கும். உங்களால் கற்பனையே செய்து பார்க்க முடியாத ஒரு அறிவாற்றல் உங்கள் வசமாகும், ஏனென்றால் உங்கள் புரிதலுக்கும், எல்லைக்கும் அப்பாற்பட்ட ஒரு அறிவாற்றல் இங்கு, இப்போது உங்களுக்குள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது, இல்லையா? அந்த அறிவாற்றல்தான் இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் ஒன்றாக பிணைத்து, பிடித்து வைத்திருக்கிறது; அதுதான் படைப்பின் கருவறையும்கூட. அந்த அறிவாற்றலின் கருவறையில்தான் அத்தனை படைப்புகளும் நிகழ்கின்றன. அது உங்களுக்கு மறுக்கப்படவில்லை. அதைப் பெறுவதற்கான அனுமதி உங்களுக்குத் தடை செய்யப்படவில்லை. ஆனால் அந்தத் திசையில் நீங்கள் பார்க்கவில்லை, அவ்வளவுதான்.

நீங்கள் யார் என்கிற அந்தச் சிறிய தன்மைக்குள் நீங்கள் மூழ்கிக் கிடக்கிறீர்கள். உங்கள் உடல், எண்ணம், உணர்ச்சிகள், சுரப்பிகள் எல்லாமே உங்களை ஆக்கிரமித்துள்ளன. அதனால் உங்களுக்கு அப்பாற்பட்டிருக்கும் ஒரு விஷயத்தைப் பார்த்து, அதன்மேல் கவனம் செலுத்துவதைப் பற்றிய எண்ணம் உங்களுக்குத் தோன்றவே இல்லை.

நிறைய அற்புதமான, அதிசயமான விஷயங்கள் இந்தப் பிரபஞ்சத்தில் மிக ஆச்சரியகரமான முறையில் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன என்றாலும், உங்கள் தலையில் குடைந்து கொண்டிருக்கும் ஒரு சிறிய புழு போன்ற எண்ணம், மற்ற எதையும் கவனிக்க விடாமல் உங்களை ஆட்கொண்டிருக்கிறது. இதுதான் மாயை.

மாயை என்றால் இந்தப் பிரபஞ்சத்தில் இல்லாத ஒன்று என்று அர்த்தம் கிடையாது. ஏதாவது அற்புதமான, முக்கியமான விஷயம் நடக்கிறபோது, இதுபோன்ற சிறு விஷயங்கள் உங்களை ஆக்கிரமித்திருக்கின்றன. இந்தச் சின்னஞ்சிறு விஷயங்கள் மற்ற அனைத்தையும் விட முக்கியமானவை என்று உங்களை நினைக்க வைக்கின்றன. இதுதான் மாயை.

எனவே ஆகாயத்தின் ஒத்துழைப்பைப் பெற, ஒரு எளிமையான செயல்பாட்டை நீங்கள் செய்யலாம். சூரிய உதயத்திற்க்குப் பிறகு, சூரியன் 30 டிகிரி கோணத்தைக் கடப்பதற்கு முன்னர், வானத்தை ஒரு முறை அண்ணாந்து பார்த்து, இன்று இந்த இடத்தில் உங்களைப் பிடித்து வைத்திருப்பதற்காக அதற்கு நன்றி சொல்லுங்கள்.

சூரியன் 30 டிகிரி கோணத்தைக் கடந்தபிறகு, அன்றைய நாளின் வேறெதாவது ஒரு சமயத்தில், ஒருமுறை வானத்தை அண்ணாந்து பார்த்து, தலை வணங்குங்கள். சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு, மீண்டும் ஒரு முறை ஆகாயத்தை அண்ணாந்து பார்த்து, தலை வணங்குங்கள். அங்கிருக்கும் ஏதோ ஒரு கடவுளைப் பார்த்து நீங்கள் தலை வணங்கவில்லை.

உங்களை இன்று, இந்த இடத்தில் பிடித்து வைத்திருக்கும் அந்த வெற்றிடத்தை வணங்குகிறீர்கள். இதைச் செய்து வந்தால், உங்கள் வாழ்க்கை ஆச்சரியப்படத்தக்க வகையில் மாறும். ஒரு நாளைக்கு மூன்று முறை இப்படி விழிப்புணர்வுடன் செய்து வந்தால், உங்களுக்கு அந்த ஆகாயத்தின் ஒத்துழைப்பு கிடைத்துவிட்டால், வாழ்க்கை பல வழிகளிலும் ஒரு மந்திரஜாலத்தைப் போல நிகழும்.
 
மேலும் அறிந்து கொள்ள :http://tamilblog.ishafoundation.org/akayam-vetriyin-vayilpadi/

Wednesday 25 December 2013

தமிழ் ஈழத்திற்கு பொது வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி ஒபாமாவிற்கு ,send a petiton to obama to conduct a refrundum for tamil eelam

அனைவர்க்கும் பகிருங்கள்..pls share to all..
கீழே கொடுத்துள்ள லிங்க் கை கிளிக் செய்து...
" ITS A CRIME TO CALL GENOCIDE AS A WAR CRIME.
CONDUCT REFERUNDUM FOR INDEPENDENT THAMIL EELAM AS PER U.N RULE
"
என்று கமென்ட் இல் போட்டு அமெரிக்கா அதிபர் ஒபாமாவிற்கு அனைவரும் அனுப்பவும்...
http://www.whitehouse.gov/contact/submit-questions-and-comments
அதன் தமிழ் அர்த்தம் "இனபடுகொலையை போர்குற்றம் என்று கூறுவது குற்றம்..சுதந்திரமான தமிழ் ஈழத்திற்கு ஐ.ந சட்டத்திற்கு உட்பட்டு பொது வாக்கெடுப்பு நடத்துங்கள் என்பது....
உங்கள் தகவலை கொடுத்து அனைவரும் அனுப்புங்கள்..மற்றவர்களையும் அனுப்ப சொல்லுங்கள்..நன்றி
please send the sentenece"

ITS A CRIME TO CALL GENOCIDE AS A WAR CRIME.CONDUCT REFERUNDUM FOR INDEPENDENT THAMIL EELAM AS PER U.N RULE "

to america president obama  by clicking the below link...please share this link to everyone,,and ask everyone to send this petition to president oabma...to conduct a refrundum for thamil eelam...thanks
http://www.whitehouse.gov/contact/submit-questions-and-comments

Saturday 12 October 2013

இனப்படுகொலை நாட்டில் காமன்வெல்த் மாநாடா ???




1796’ல் பிரித்தானிய அரசின் சார்பில் இலங்கைக்கு வந்து, இலங்கையின் நிலைமைகளை துல்லியமாக ஆய்வு செய்து, பிரிதானிய அரசுக்கு அறிக்கையளித்த ‘கிலைக்கோன்’ என்ற சிவில் அதிகாரி வடக்கு கிழக்கு பிரதேசம் பற்றியும் அங்கு தமிழர்கள் தாம் ஆட்சி புரிந்து வாழ்ந்து வருகின்றனர் என்பது பற்றியும் மிக தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார்.
இலங்கையில் இரண்டு இறைமை உள்ள நாடுகள் உண்டு என்பது வரலாற்று காலத்தில் இருந்தே அறிய பட்ட உண்மை ,

ஆனால் பிரித்தானிய ஏகாதிபத்திய அரசினால் அவர்களின் நிர்வாக வசதியின் பொருட்டு இலங்கை ஒரே நாடு என 1833ம் ஆண்டில் அறிமுகபடுத்தபட்டது. இதன் மூலம் தமிழினத்தின் சுயாதீனமும் தனிப்பிரதேசமும் ஐக்கிய இலங்கை என்ற ஒரே அமைப்பின் கீழ் பறிக்கப்பட்டத் துரோக வரலாறு ஆங்கிலேயர்களால் நிகழ்த்தப்பட்டது.

1948’ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இலங்கைக்கு டொமினியன் அந்தஸ்த்து (சுதந்திரம்) ஆங்கிலேயர்களால் வழங்கப்பட்டது.

தனியாட்சி நடத்திய பூர்வக்குடி மக்களான தமிழர்களின் ஈழ தாயகமான வடக்கு கிழக்கு பகுதியை பிடித்த ஆங்கிலேயர்கள் 1948’ல் தமிழர்களிடமே திருப்பி கொடுத்திருக்க வேண்டும். அதற்கு மாறாக தவறான புள்ளிவிவரங்களின் அடிப்படையிலும் தெளிவற்ற அரசியல் சித்தாந்தங்களின் அடிப்படையிலும் கொலைகார சிங்களவர்களிடம் இலங்கை முழுவதையும் ஒப்படைத்துவிட்டார்கள்.

ஈழ தமிழர்கள் தங்களுக்கே உரிய வாழ்கை முறை, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றைக்கொண்ட தனிப்பட்ட ஒரு சிறுபான்மை நாட்டு இனம் (Minority Nation) என்பதை மறைத்து அவர்கள் இலங்கை சிறுபான்மையினர் என்று கூறி,
பிரச்னையை திசை திருப்பிய காரணத்தினால் ஈழ தமிழர்கள் பிரச்சனை உள்நாட்டு பிரச்சனை என்றும் மற்ற நாட்டின் கவனத்திற்கோ அல்லது உலக மன்றத்தின் கவனத்திற்கோ உட்படாத பிரச்சனை என்றும் ஒரு தவறான கற்பனை கருத்து உருவாக்க பட்டிருக்கிறது.

இதை மற்ற நாடுகள் அவர் அவர் சுயநலம் கருதி கண்டுகொள்ளாமல் இருக்கலாம், ஆனால் பிரிதானிய அரசு அன்றைக்கு செய்த தவறை உணர்ந்து ஈழ தமிழர்களிடம் இருந்து பறித்த நாட்டை தமிழர்களிடமே ஒப்படைவு செய்ய பட துணை நிற்க வேண்டும்.
செய்த பாவத்திற்கு பிராயச்சித்தம் தேடுவதற்கு பதிலாக “குதிரை கீழே தள்ளியது மட்டும் இல்லாமல் குழியை பறித்தது போல” இனப்படுகொலை செய்த நாட்டில் காமன் வெல்த் மாநாடு நடத்துவது தமிழர்களை மேலும் அழிவிற்கே கொண்டு செல்லும்.
ஆகவே, தான் செய்த வரலாற்று தவறை நேர் செய்யும் விதமாக காமன் வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க பிரிட்டன் துணை நிற்க வேண்டும். இதற்கு தமிழர்களாகிய நாம் இந்தியாவிற்கும் , பிரிதானிய அரசிற்கும் அழுத்தம் கொடுக்கும் விதமாக செயல் பட வேண்டும்..
 
-Prabhakaran V Prabha PK  https://www.facebook.com/prabha.pk.96

ஒன்றாக வேண்டும் நாம் வென்றாக வேண்டும் தமிழ்

இங்கு இணையத்தில் ஆதரவு தெரிவிக்கும் சென்னையில் உள்ள உணர்வாளர்களே பலர் இங்கு நடக்கும் போராட்டங்களில் கலந்து கொள்வது இல்லை..

தயவுசெய்து உணர்வாளர்கள் போராட்டங்களை பல்வேறு வடிவங்களில் முன்னெடுங்கள்...உங்கள் பகுதிகளில் நடக்கும் போரட்டங்களில் கலந்து கொள்ளுங்கள்..

இனி போராட்டங்களில் கலந்து கொள்வதற்கான காரணங்களை கண்டெடுங்கள்..

உணர்வு உள்ள நாமே பங்கெடுக்க வில்லை என்றால் பிறகு மக்களிடம் எப்படி உணர்வை மேலோங்க செய்ய போகிறோம்...

சாதி,மத,கட்சி பேதமின்றி யார் இனத்திற்கு ஆதரவாக போராடினாலும்...அவர்களின் கடந்த கால செயல்களினால் விமர்சனங்களை வைக்காமல்...அங்கு சென்று ஆதரவு தெரிவியுங்கள்....

துரோகியாக இருந்தாலும் எதிரியாக இருந்தாலும் இனத்திற்கு ஆதரவான போரட்டங்களை செய்தால்....அவர்கள் இனத்திற்கு ஆதரவாக தொடர்ந்து நடிப்பதற்கு ஆவது ஆதரவு கொடுங்கள்...அவர்கள் இனத்திற்கு ஆதரவாக தொடர்ந்து நடிக்க வேண்டிய நிர்பந்தத்தை உருவாக்குங்கள்.....ஆனால் தேர்தலில் அவர்களுக்கு உங்கள் வாக்குகளை போடாதீர்கள்...இனத்திற்கு ஆதரவானவர்களுக்கு மட்டும் உங்கள் வாக்குகளை போடுங்கள்....

நீங்கள் எந்த கட்சி,அமைப்பில் இருந்தாலும் இனத்திற்கு வேறு கட்சி ,அமைப்பில் உள்ளவர்கள் ஆதரவாக போராட்டம் நடத்தினால்....உங்கள் கட்சி அமைப்புகளை மறந்து தமிழனாக அவர்களுக்கு ஆதரவு கொடுங்கள்..ஊக்கபடுத்துங்கள்......

இனத்தின் தோல்வி என் தோல்வி
இனத்தின் வெற்றி என் வெற்றி
என்பதை உணருங்கள்..

ஒன்றுபடுவோம் வென்றெடுப்போம்...
தமிழன் என்று சொல்லடா
தரணியில் தலைநிமிர்ந்து நில்லடா
என்ற வாசகத்தை மெய்பிப்போம் வாருங்கள்
என் இன தோழமைகளே

மேலும் அறிந்து கொள்ள :https://www.facebook.com/GTOChennai