Wednesday 21 August 2013

மெட்ராஸ் கபே படத்தை தடை செய்ய வேண்டி censor boaard க்கு petition புகார் அனுப்புங்கள்

இதில் தொடர்பு கொண்டு censor board க்கு petition இதில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சலுக்கு (email) அனுப்புங்க மெட்ராஸ் கபே படத்திற்கு எப்படி அனுமதி கொடுத்தீங்கனு....சிங்களம் செய்த இனபடுகொலையை ஏன் எடுக்கவில்லை....தமிழ் போராளிகளை எதற்கு தீவிரவாதிகளாக சித்தரித்து உள்ளார்கள் என்று......இந்த படம் மூலம் தமிழர்கள் அழிக்க பட வேண்டியவர்கள் நு சொல்ல வரீங்களா ....அந்த படத்திற்கு அனுமதி கொடுத்து.....அப்படின்னு உங்க கருத்தை email பண்ணுங்க....

அதில் உள்ள தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு உங்க கருத்தை பதிவு செய்யுங்க.... இதை அனைவர்க்கும் பகிருங்கள்.இன்று ஒரே நாள் தான் உள்ளது படம் நாளை (23-08-2013) ஆகஸ்ட் 23 வெள்ளிகிழமை  வெளியிட உள்ளார்கள்..அதனால்..உடனே புகார் தெரிவியுங்கள்


 குறிப்பு :மின்னஞ்சல் email subject ல BAN MADRAS CAFE நு போடுங்க

Smt. Leela Samson
Central Board of Film Certification
Bharat Bhavan
91-E Walkeshwar Road,
Mumbai 400 006
Tel No. 2363 1048
Fax No: 2369 0083
Email : chairperson.cbfc@nic.in

Smt. Pankaja Thakur
Chief Executive Officer
Central Board of Film Certification
Bharat Bhavan
91-E Walkeshwar Road,
Mumbai 400 006
Tel No. 2363 1048
Fax No: 2369 0083
Email : ceo.cbfc@nic.in

Shri V.Packirisamy,
Regional Officer,
CBFC, Chennai
Tel: 044-28278764
E-Mail :
rochen.cbfc@nic.in

Monday 19 August 2013

இனம் முக்கியமா ?கட்சி முக்கியமா ?

தமிழர்களே உங்கள் கட்சியை விட உங்கள் இனத்திற்கு முன்னுரிமை கொடுங்கள்....இனத்திற்காக கட்சியை இழக்கலாம் ஆனால் கட்சிக்காக இனத்தை இழக்க கூடாது..இங்கு மாறி நடக்கிறது தயவுசெய்து இனி மாறிவிடுங்கள்...எதற்கு முதலில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று சிந்தித்து உணருங்கள்.....நீங்கள் ஒரு கட்சியில் இருந்தாலும் கட்சியை விட்டு வரமுடியவில்லை என்றாலும் தயுவுசெய்து இனத்திற்கு ஆதரவான கட்சிக்கு வாக்களியுங்கள் இனி வரும் தேர்தலில்....தமிழர்களே கட்சியை விட இனம் தான் முக்கியம் என்பதை உணருங்கள்.......
 
 
தமிழ்நாட்டில் இனத்தின் எதிரிகளுக்கு ஆதரவு தரும் சில கட்சிகளில் உள்ள சில தமிழர்களே உங்களுக்கு இனத்தை விட கட்சி தான் முக்கியமா...
ஏன் இனத்தின் எதிரிகளுக்கு ஆதரவு தருகிறீர்கள்....இனத்தின் எதிரிகளுக்கு ஆதரவளிப்பது குற்றஉணர்வு தோன்றவில்லையா...தமிழின போராட்டத்தை வேறு வடிவத்திற்கு கொண்ட சென்ற தமிழர்களுகாக தங்கள் உயிரை துறந்த விடுதலைபுலிகளை ...உங்கள் கட்சிக்காக எதிர் பிரச்சாரம் செய்கிறீர்களே.....இனத்தை விட உங்கள் கட்சி தான் முக்கியமா...இனம் அழிந்தாலும் பரவா இல்லை ஆனால் உங்கள் கட்சி தான் முக்கியமா உங்களுக்கு....சிந்தித்து பாருங்கள்....தமிழீழ போரட்டத்திற்கு ஆதரவு கொடுங்கள்....உங்களுக்கு வரும் நன்மையை நீங்களே எதிர்ப்பது உங்களுக்கு நன்மையா.....தயவுசெய்து கட்சியில் உள்ள அனைவரும் உங்களுக்கு கிடைக்கும் சிறு ஆதாயத்திற்காக உங்கள் கட்சியை இனத்திற்கு எதிராக செயல்பட்டாலும் ஆதரிக்காதீர்கள்..இனத்திற்கு முதல் முக்கியத்துவம் கொடுங்கள்...இனத்திற்கு பிறகுதான் கட்சி....இது நான் எல்லா கட்சியில் உள்ளவர்களுக்கும் சொல்கிறேன்.....

உனக்கு என்று ஒரு நாடு அதை ஆட்சி செய்யும் உரிமையும் உனக்கு மட்டுமே..அது வேண்டாமா....உனக்கு???



தமிழனுக்கென்று தனி தமிழீழ நாடு ..
அந்நாட்டை ஆட்சி செய்யும் வாய்ப்பு உனக்கும் உண்டு தமிழா..
தமிழ்நாட்டில் தமிழன் ஆட்சி செய்யமுடியாத சூழ்நிலையில்....
தமிழன் மட்டுமே ஆள முடியும் உன் ஈழ நாட்டில் என்பதை புரிந்துகொள்....
தமிழே ஆட்சி மொழி,தமிழனே ஆட்சியாளன்,தமிழனே குடிமக்கள்..
தமிழினத்தை பாதுகாக்க தமிழனை கொண்ட ராணுவம்.....
தமிழன் வாழும் நாட்டில் எல்லாம் தமிழர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு உதவுவதற்கு தமிழீழ தூதரகம்...
தமிழர்களுக்கு இரட்டை குடிஉரிமை...இன்னும் பல நன்மைகள் உனக்கு(தமிழினத்திற்கு)ஏற்படபோகிறது என்பதை என்னிப்பார்...
இந்த தலைமுறையிலயே இன்னும் இதுபோன்று பலநன்மைகள் உனக்கு கிடைக்க....பிறகு வரும் உன் சந்ததிகளுக்கு கிடைக்க
தமிழீழம் அமைவதற்கு முழு ஆதரவு கொடுங்கள்.
நீங்கள் ஆதரவு கரம் மட்டும் நீட்டினால் போதும்..விரைவில் ஈழம் மலர வழி பிறக்கும்

ஒரு தமிழனா நான் இந்த பக்கத்தை புகார் செய்துவிட்டேன் நீங்க....??????



 

================================================
தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும்,
இந்திய அரசின் பரப்புரைப் படமான 'மெட்ராஸ் கபே' படத்தின்,
விளம்பரப் பக்கத்தை முகநூலிலிருந்து விரட்டியடிப்போம்!
================================================

தமிழர்களின் ஞாயமான விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரித்து வரும் சிங்களப் பேரினவாத இலங்கை அரசும், அதற்கு முழு உதவிகளையும் செய்து வரும் தமிழர்களின் முதன்மைப் பகை சக்தியான இந்திய அரசும் இணைந்து தயாரித்துள்ள படமாக, 'மெட்ராஸ் கபே' திரைப்படம் வெளிவரவுள்ளது.

தமிழர்களை அந்நியர்களாகவே எப்போதும் கருதுகின்ற வடநாட்டவர்களும் மலையாளிகளும் இணைந்துப் பணியாற்றியுள்ள இப்படத்தை தமிழகம் மட்டுமின்றி, உலகின் எந்தப் பகுதியிலும் திரையிடக் கூடாதென தமிழ் உணர்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

இப்படத்தை, தமிழக அரசு உடனடியாகத் தடை விதிக்க வேண்டுமெனவும் கோருகிறோம்.

இப்படத்தின் முகநூல் விளம்பரப்பக்கம் கீழ்க்கண்ட இணைப்பில் செயல்படுகின்றது.

முகவரி: https://www.facebook.com/DecodeMadrasCafe

தமிழ் உணர்வாளர்கள் அப்படத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், அப்பக்கத்திற்குச் சென்று, Report Page என்ற தெரிவில் உள்ள 'Its Harassing me' என்ற வார்த்தையைக் கிளக் செய்யுமாறு அன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்!

==================================
தலைமைச் செயலகம்
தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி
==================================

Tuesday 13 August 2013

இனி ஆகிலும் தன்னிலை உணர்ந்து சுதாரித்து கொள்ளுமா இந்தியா?



இந்திய (தமிழ்) மீனவனை நடுகடலில் சுட்டுகொல்லப்படும் இலங்கை கடற்படையை இந்தியா தட்டி கேட்காத வரை,கடும் நடவடிக்கை எடுக்காத வரை .நான் இந்தியனா என்று என் மனம் தொடர்ந்து கேள்வி எழுப்புகிறது ,ஒரு சிறு நாடு  தொடர்ந்து ஒரு பெரிய நாட்டின் குடிமக்களை  எளிமையான காரணங்களுக்காக சுட்டு கொல்ல ,பயங்கர ஆயுதங்களால் தாக்க முடிகிறது என்றால்...அந்நாட்டின் குடிமகனுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது....அவன் எப்படி தன்நாட்டை பற்றி பெருமை கொள்ளமுடியும்....எல்லையில் ஒரு ராணுவ வீரன் கொல்லபட்டால்.....அன்று பாராளமன்றம் முடங்குகிறது...ஊடகங்கள் அன்று முழுவதும் செய்தி வெளியிடுகிறது...அரசியல் கட்சிகள் கொந்தளிக்கின்றன....அது வரவேற்க தகுந்தது.....ஒரு நாட்டையும் அன் நாட்டின் குடிமக்களையும் காப்பாற்றுவதுதான் முப்படைகளின் கடமை...அப்பொழுது  ஒரு குடிமகன் பிற நாட்டு ராணுவத்தால் கொல்ல பட்டால் ,நாடு எந்த அளவு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,எதிர் கட்சிகள் எந்த அளவு கொந்தளிக்க வேண்டும்.....பல லட்ச கணக்கான கோடி பாதுகாப்பு க்கு பட்ஜெட் இல் நிதி ஒதுக்கும் போது....குடிமக்களின் உயிரை தொடர்ந்து பிற நாட்டு இராணுவத்திடம் இருந்து காப்பாற்ற முடியவில்லை என்றால்.....பிறகு கடற்படை என்ன செய்துகொண்டு உள்ளது....வேறு நாட்டுடன் போர் நடக்கிறதா ...கப்பற்படை தன் பணியை (குடிமக்களை அந்நியரிடம் இருந்து காப்பது) செய்யாமல் இருப்பது....அவர்கள் பணியை செய்யாமல் வேறு என்ன செய்து கொண்டு உள்ளார்கள்....தன் கடல் பிராந்தியத்தில் தன குடி மக்களின் உயிரை காப்பாற்ற முடியாத கடற்படை இருந்து என்ன பலன்....அதற்கு ஒதுக்கும் நிதிக்கு என்ன பலன்....அரசாங்கத்தின் பணம் அதிக அளவு விரயம் ஆகிறது....ஆனால் அதனால் உபயோகம் இல்லை...அப்படி என்றால்....அப்பொழுது கடற்படை வேண்டுமா....யதார்த்தத்தில் உபயோகம் இல்லாத கடற்படை இல்லாமல் இருந்தாலே அந்த நிதி வேறு உபயோகமான காரியத்திற்கு பயன்படுத்தி கொள்ளலாம்.....ஆனால் இதில் கப்பற்படை யை குற்றம் சொல்வதை விட.....அதை பனி செய்ய விடாமல் தடுக்கும்....இந்திய காங்கிரஸ் அரசுதான்....முழுமுதற் காரணம்.....அதை எதிர்த்து கேட்காத எதிர் கட்சிகளும் ,அரசியல் வாதிகளும்....அதை வெளிக்கொண்டு வராத ஊடகமும்.....குற்றவாளிகளே.... இதுவே இந்திய-தமிழன்  அல்லாத வேறு இந்திய மீனவன் கொல்லபட்டால் இதே காங்கிரெஸ் அரசும்,எதிர் கட்சியும் ஊடகமும்..கப்பற்படை மூலமும் அரசியல் ரீதியாகவும். ஊடகம் மூலம் .கடும் நடவடிக்கையும் கடும் கண்டனமும் செயல்படுத்தி இருக்கும்....அப்படி என்றால்  இந்திய-தமிழனுக்கும் ,வேறு இந்தியனுக்கும் ஒரு அரசு பாகுபாடு பார்கிறது என்றால்.....
பாதிக்கப்படும் தமிழ் குடிமகன் தன்னை எப்படி இந்தியன் என்று சொல்லி பெருமிதம் கொள்ளமுடியும...? இதை இந்திய அரசும்,எதிர் கட்சிகளும்,ஊடகமும் பரிசிலித்து  இந்த மாற்றான் தாய் மனநிலையை உணர்ந்து மாற்றி கொள்ள வேண்டிய தருணம்....இல்லை என்றால் வருங்காலங்களில்....பெரும் பாதிப்பை இந்திய துணை கண்டத்தில் ஏற்படுத்தும் என்பது உண்மை....இனி ஆகிலும் விழித்து கொள்ளுங்கள்.

Monday 12 August 2013

மீண்டும் எழுச்சி பெறுமா தமிழினம் ,தன் இனத்தை அழிவில் இருந்து மீட்க ????



  பல்லாயிரம் வருடங்களாக நாகரிகத்திலும் ,பண்பாட்டிலும்,விஞ்ஞானத்திலும்  தலை சிறந்து விளங்கிய ...பல்வேறு நாடுகளை ஆட்சி செய்த....தமிழ் இனம்....

நேற்று தோன்றியசிங்களத்திடம்....தோற்று அடி வாங்கி கொண்டு  அடிமையாக்...உலகம் முன்னிலையில் நாம் இருப்பது ஏன்.....10 மைல் தொலைவில்  நாம் இருந்தும்....நம்மால் சிங்களவனின் அட்டுழியங்களை அடக்க முடியாமல் இருப்பது ஏன்......

தமிழ் மண்ணில் தமிழன் இங்கு ஆட்சி செய்ய முடியாதது ஏன்.....
சொந்த மண்ணில் எதிர் கட்சியாக கூட வரமுடியாத மோசமான நிலை ஏன்..

இலங்கையில் வலுகட்டாயமாக அடிமையாக வைக்க முயல்கிறார்கள் ராணுவத்தின் மூலம்....

இங்கு தமிழ்நாட்டில் நாமே வலிந்து வலுகட்டாயமாக அடிமையாக இருப்பது ஏன்..

இனியும் நீங்கள் தமிழ் இனமாக ஒன்று பட்டு உணர்வு கொண்டு எழுச்சி பெற வில்லை என்றால்......

விரைவில் தமிழ் இனத்தின் இறுதி வரலாறு இலங்கையிலும்...பிறகு இங்கும் எழுதப்படும்......

அது வரை நீங்கள் பொறுமையாக தான் உண்டு தன வேலை உண்டு நமக்கேன் என்று  இருக்க போகிறீர்களா....

போராட்டமே வாழ்கையாகவும் ,வாழ்கையே போராட்டமாகவும் வாழும் ஈழ தமிழர்களுக்கு.....நீங்கள்  தர விரும்பும் பரிசு என்ன மரணமா ,இல்லை விடுதலையா...

உங்களிடம் பணம் இல்லையா உதவ ..பரவா இல்லை

உங்களின் உயிரை கொடுக்க விருப்பம் இல்லையா ,பரவாயில்லை ...

ஆனால் அனைவரும் உணர்வை..தமிழன் என்று உணர்வை ...கொடுக்கலாமே...உங்கள் உணர்வை....நீங்கள் அழுத்தமாக பதிவு செய்தால்....
உலகம்  திரும்பி பார்க்கும்...அவர்களுக்கு விடுதலை கிடைக்கும்....

உயிர் இருந்தால்....மூளை செத்து போக வில்லை என்றால்.....உணர்வு கண்டிப்பாக இருக்கும்.....அதை வெளிபடுத்துவதில் உங்களுக்கு தயக்கம் ஏன்....

அதனால் உங்களுக்கு மரண தண்டனையா.....??

உங்கள்  பணம் விரயம் ஆகிறதா....??

உங்கள் தொழில் நஷ்டம் அடைகிறதா..???

இல்லை தமிழன் என்ற உணர்வு மட்டும் இல்லையா........

உணர்வை மட்டும் கொடுங்கள் தமிழினத்தின் உரிமையை பெற.

உங்களால் முடியும் உதவிகளையே கேட்கிறோம்....

அவற்றை தாராளமாக் கொடுங்கள்........

வருங்காலங்களில்  தேர்தலில் தமிழ் இன உணர்வு ஈழ ஆதரவு கூட்டனிக்கு வாக்களியுங்கள்.....

தமிழ் இன உணர்வு ஆதரவு போராட்டங்களில் பங்குகொள்ள பாருங்கள்....

உங்கள் நெருங்கிய நண்பர்கள் ,உறவினர்களிடம்..  இன உணர்வை மேலோங்க செய்ய....விழிப்புணர்வு உண்டாக்குங்கள்......அவர்களிடம்  அவர்களின் நெருங்கிய நண்பர்களிடம்,உறவினர்களிடம்......கொண்டு செல்ல சொல்லுங்கள்......

இது மக்கள் போராட்டமாக மாற வேண்டும்....

உங்களுக்கு நேரம் இருக்கும் போது  ,.

போராட்டம் நடை பெற்றால் அவசியம் பங்கு பெறுங்கள்.......

மற்றவர்களுடன்  உரையாடும் பொது... ..தமிழ் இனத்தின்  விடுதலை பற்றி கொஞ்சம் உரையாடுங்கள்.....

உங்களிடம் பழகும் பிற மாநில ,வெளிநாடு மக்களிடம் ஈழம் பற்றிய நிலையை எடுத்து கூறுங்கள்....ஆதரவு கேளுங்கள்....

தமிழ் இனத்திற்கு தமிழனே உதவ முன்வரவில்லை என்றால் பிறகு மற்றவர்கள் எப்படி முன்வருவார்கள்.....

நீங்களும் உங்கள் சிந்தனைக்கு ஏற்ப ,போராட்டம் செய்யலாம்....,போராட்ட வடிவத்தை மாற்றலாம்....இனத்தின் எழுட்சிக்கு.....

வித்தியாசமான முறையிலும் உங்களுக்கு idea தோன்றும் வழியில் போராட்டம் செய்யலாம்....மக்களிடம்  உலகத்திடம் ..ஈழத்தின் தேவையை உணர்த்த வேண்டும்,சென்றடைய வேண்டும்

--தொடரும்