Saturday 12 October 2013

இனப்படுகொலை நாட்டில் காமன்வெல்த் மாநாடா ???




1796’ல் பிரித்தானிய அரசின் சார்பில் இலங்கைக்கு வந்து, இலங்கையின் நிலைமைகளை துல்லியமாக ஆய்வு செய்து, பிரிதானிய அரசுக்கு அறிக்கையளித்த ‘கிலைக்கோன்’ என்ற சிவில் அதிகாரி வடக்கு கிழக்கு பிரதேசம் பற்றியும் அங்கு தமிழர்கள் தாம் ஆட்சி புரிந்து வாழ்ந்து வருகின்றனர் என்பது பற்றியும் மிக தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார்.
இலங்கையில் இரண்டு இறைமை உள்ள நாடுகள் உண்டு என்பது வரலாற்று காலத்தில் இருந்தே அறிய பட்ட உண்மை ,

ஆனால் பிரித்தானிய ஏகாதிபத்திய அரசினால் அவர்களின் நிர்வாக வசதியின் பொருட்டு இலங்கை ஒரே நாடு என 1833ம் ஆண்டில் அறிமுகபடுத்தபட்டது. இதன் மூலம் தமிழினத்தின் சுயாதீனமும் தனிப்பிரதேசமும் ஐக்கிய இலங்கை என்ற ஒரே அமைப்பின் கீழ் பறிக்கப்பட்டத் துரோக வரலாறு ஆங்கிலேயர்களால் நிகழ்த்தப்பட்டது.

1948’ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இலங்கைக்கு டொமினியன் அந்தஸ்த்து (சுதந்திரம்) ஆங்கிலேயர்களால் வழங்கப்பட்டது.

தனியாட்சி நடத்திய பூர்வக்குடி மக்களான தமிழர்களின் ஈழ தாயகமான வடக்கு கிழக்கு பகுதியை பிடித்த ஆங்கிலேயர்கள் 1948’ல் தமிழர்களிடமே திருப்பி கொடுத்திருக்க வேண்டும். அதற்கு மாறாக தவறான புள்ளிவிவரங்களின் அடிப்படையிலும் தெளிவற்ற அரசியல் சித்தாந்தங்களின் அடிப்படையிலும் கொலைகார சிங்களவர்களிடம் இலங்கை முழுவதையும் ஒப்படைத்துவிட்டார்கள்.

ஈழ தமிழர்கள் தங்களுக்கே உரிய வாழ்கை முறை, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றைக்கொண்ட தனிப்பட்ட ஒரு சிறுபான்மை நாட்டு இனம் (Minority Nation) என்பதை மறைத்து அவர்கள் இலங்கை சிறுபான்மையினர் என்று கூறி,
பிரச்னையை திசை திருப்பிய காரணத்தினால் ஈழ தமிழர்கள் பிரச்சனை உள்நாட்டு பிரச்சனை என்றும் மற்ற நாட்டின் கவனத்திற்கோ அல்லது உலக மன்றத்தின் கவனத்திற்கோ உட்படாத பிரச்சனை என்றும் ஒரு தவறான கற்பனை கருத்து உருவாக்க பட்டிருக்கிறது.

இதை மற்ற நாடுகள் அவர் அவர் சுயநலம் கருதி கண்டுகொள்ளாமல் இருக்கலாம், ஆனால் பிரிதானிய அரசு அன்றைக்கு செய்த தவறை உணர்ந்து ஈழ தமிழர்களிடம் இருந்து பறித்த நாட்டை தமிழர்களிடமே ஒப்படைவு செய்ய பட துணை நிற்க வேண்டும்.
செய்த பாவத்திற்கு பிராயச்சித்தம் தேடுவதற்கு பதிலாக “குதிரை கீழே தள்ளியது மட்டும் இல்லாமல் குழியை பறித்தது போல” இனப்படுகொலை செய்த நாட்டில் காமன் வெல்த் மாநாடு நடத்துவது தமிழர்களை மேலும் அழிவிற்கே கொண்டு செல்லும்.
ஆகவே, தான் செய்த வரலாற்று தவறை நேர் செய்யும் விதமாக காமன் வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க பிரிட்டன் துணை நிற்க வேண்டும். இதற்கு தமிழர்களாகிய நாம் இந்தியாவிற்கும் , பிரிதானிய அரசிற்கும் அழுத்தம் கொடுக்கும் விதமாக செயல் பட வேண்டும்..
 
-Prabhakaran V Prabha PK  https://www.facebook.com/prabha.pk.96

ஒன்றாக வேண்டும் நாம் வென்றாக வேண்டும் தமிழ்

இங்கு இணையத்தில் ஆதரவு தெரிவிக்கும் சென்னையில் உள்ள உணர்வாளர்களே பலர் இங்கு நடக்கும் போராட்டங்களில் கலந்து கொள்வது இல்லை..

தயவுசெய்து உணர்வாளர்கள் போராட்டங்களை பல்வேறு வடிவங்களில் முன்னெடுங்கள்...உங்கள் பகுதிகளில் நடக்கும் போரட்டங்களில் கலந்து கொள்ளுங்கள்..

இனி போராட்டங்களில் கலந்து கொள்வதற்கான காரணங்களை கண்டெடுங்கள்..

உணர்வு உள்ள நாமே பங்கெடுக்க வில்லை என்றால் பிறகு மக்களிடம் எப்படி உணர்வை மேலோங்க செய்ய போகிறோம்...

சாதி,மத,கட்சி பேதமின்றி யார் இனத்திற்கு ஆதரவாக போராடினாலும்...அவர்களின் கடந்த கால செயல்களினால் விமர்சனங்களை வைக்காமல்...அங்கு சென்று ஆதரவு தெரிவியுங்கள்....

துரோகியாக இருந்தாலும் எதிரியாக இருந்தாலும் இனத்திற்கு ஆதரவான போரட்டங்களை செய்தால்....அவர்கள் இனத்திற்கு ஆதரவாக தொடர்ந்து நடிப்பதற்கு ஆவது ஆதரவு கொடுங்கள்...அவர்கள் இனத்திற்கு ஆதரவாக தொடர்ந்து நடிக்க வேண்டிய நிர்பந்தத்தை உருவாக்குங்கள்.....ஆனால் தேர்தலில் அவர்களுக்கு உங்கள் வாக்குகளை போடாதீர்கள்...இனத்திற்கு ஆதரவானவர்களுக்கு மட்டும் உங்கள் வாக்குகளை போடுங்கள்....

நீங்கள் எந்த கட்சி,அமைப்பில் இருந்தாலும் இனத்திற்கு வேறு கட்சி ,அமைப்பில் உள்ளவர்கள் ஆதரவாக போராட்டம் நடத்தினால்....உங்கள் கட்சி அமைப்புகளை மறந்து தமிழனாக அவர்களுக்கு ஆதரவு கொடுங்கள்..ஊக்கபடுத்துங்கள்......

இனத்தின் தோல்வி என் தோல்வி
இனத்தின் வெற்றி என் வெற்றி
என்பதை உணருங்கள்..

ஒன்றுபடுவோம் வென்றெடுப்போம்...
தமிழன் என்று சொல்லடா
தரணியில் தலைநிமிர்ந்து நில்லடா
என்ற வாசகத்தை மெய்பிப்போம் வாருங்கள்
என் இன தோழமைகளே

மேலும் அறிந்து கொள்ள :https://www.facebook.com/GTOChennai